Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கு ஆசியாவில் பற்றி எரியும் போர் சூழல், உலக நாடுகளை உற்று நோக்க வைத்திருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் எரிசக்தி தேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, சர்வதேச கடல் வழிப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். ஓமன் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) வழியாகத்தான் உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நடைபெறுகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதமும், எல்.என்.ஜி (LNG) தேவையில் 50 சதவீதத்திற்கும் மேலதிகமாக இந்த வழியாகவே வருகிறது.

PM Modi makes an emergency call with Iran amid the Strait of Hormuz issue

சமீபத்தில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலில், இரு நாடுகளின் முக்கிய எரிசக்தி மையங்கள் தாக்கப்பட்டன. இது உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதிக்கும் என எச்சரித்த பிரதமர் மோடி, "யுத்தப் பாதை யாருக்கும் பலன் தராது; அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு" எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மோடியின் 'ஈத் - நவ்ரூஸ்' வாழ்த்தும்.. மறைமுக மெசேஜும்!

ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், அந்தப் பண்டிகைகள் வளைகுடா பகுதியில் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். அதே வேளையில், கடல் வழிப் பாதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பையும் ஈரான் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஈரான் தரப்பிலோ, "நாங்கள் போரைத் தொடங்கவில்லை. பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, இந்தப் பதற்றத்தைத் தணிக்கவும், ஈரான் மீதான ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க வேண்டும்" என அதிபர் பெசெஷ்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா? மத்திய அரசின் 'மாஸ்டர் பிளான்'!
போர்ச் சூழலால் இந்தியாவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற அச்சம் நிலவிய நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது:

பயப்படத் தேவையில்லை: நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு: சுத்திகரிப்பு நிலையங்களில் எல்.பி.ஜி (LPG) உற்பத்தி வேகமெடுத்துள்ளது.

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்: ஏற்கனவே 20 சதவீதமாக இருந்த வணிக எரிவாயு விநியோகம், தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னுரிமை யாருக்கு?: ஹோட்டல்கள், உணவகங்கள், பால் பண்ணைகள் மற்றும் சமூக சமையல் கூடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி: 5 கிலோ எடை கொண்ட சிறிய எல்.பி.ஜி சிலிண்டர்கள் (FTL) புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதில் டெல்லி மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா அல்லது கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+