என்ஆர்சி குறித்த அமித் ஷாவின் கருத்தை பிரதமர் மோடி மறைக்க பார்க்கிறார்.. ப சிதம்பரம் தாக்கு
சென்னை: தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளதாக அமித் ஷா கூறியதை பிரதமர் நரேந்திர மோடி மறைக்க பார்க்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடநத் மெகா பேரணியில் உரையாற்றிய போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தணிக்கும் விதமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இல்லை என்றும் அது தொடர்பாக ஒருபோதும் கலந்துரையாடப்படவிலலை என்றார்.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மற்ற அமைச்சர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும் அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக கூறியிருந்தார்கள்.
அதை மறுக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் எழுத்து பூர்வமாக அறிவித்தால் மட்டுமே இந்த வார்த்தை இதயத்தில் இருந்து வந்ததாக பார்க்க முடியும் என்றார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி சென்னையில் குடியுரிமைதிருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் இன்று பேரணி நடத்தியது. இந்த பேரணியில் பங்கேற்ற ப சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்களை மறைக்க முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனா உண்மையில் பாஜக பின் வாங்கவில்லை. இதயபூர்வமாக இந்த மாற்றம் வரவில்லை. முழுமையாக எழுத்து பூர்வமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதும்ட எங்கள் அரசு செய்யாது என்று பிரதமர் மோடி அறிவித்தால் மட்டுமே இதயப்பூர்வமான மாற்றமான மாற்றமாக இருக்கும்" என்றார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications