புதிய நாடாளுமன்றத்திற்கு புதிய பெயர் சூட்டிய மோடி.. என்ன அர்த்தம் தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்ற பழைய கட்டிடத்தை சம்விதான் சதன், அதாவது அரசியலமைப்பு இல்லம் என்று அழைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது உரையில் தெரிவித்து உள்ளார்.
கடந்த மே மாதம் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் பிரதமர் மோடி உரையை நிறைவு செய்துவிட்டு அனைத்து எம்பிக்களுடன் புதிய நாடாளுமன்றத்திற்கு சென்றார். இன்று மதியம் புதிய நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நடைபெற்றது.

முன்னதாக நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்று, இங்கிருந்து நாம் விடைபெற்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் செல்கிறோம். விநாயக சதுர்த்தி நாளான இது மங்களகரமானதாகும்." என்று கூறினார். அதை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்களை நோக்கி பேசிய அவர், "நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் சிந்தித்துப் பார்த்த பிறகு அதைக் கருத்தில் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போது நாம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு செல்கிறோம் என்பதால், இந்த அவையின் பெருமை ஒருபோதும் குறையக்கூடாது. நாம் இதை பழைய நாடாளுமன்றம் என்று மட்டும் அழைக்கக்கூடாது. நீங்கள் இருவரும் அனுமதித்தால், இந்தக் கட்டிடத்திற்கு 'சம்விதான் சதன்' என்று பெயரிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். (சம்விதான் சதன் என்றால் அரசியலமைப்பு இல்லம் என்று பொருள்)
எப்போதும் நமக்கு அது உத்வேகமாக இருக்கும். 'சம்விதான் சதன்' என்று நாம் அதை அழைக்கும்போது, ஒரு காலத்தில் இங்கு அரசியலமைப்பு நிர்ணய சபையில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர்களின் நினைவுகள் அதோடு இணைக்கப்படும். இந்த வாய்ப்பை நாம் கைவிடக் கூடாது. இந்த அரிய பரிசை நான் அடுத்த தலைமுறைகளுக்கு வழங்குவோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது இந்தப் பழைய நாடாளுமன்ற கட்டிடம். இது 1927 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 6 ஆண்டுகள் நடைபெற்று உள்ளன.
இக்கட்டிடத்தில் இம்பீரியல் ஆட்சி கவுன்சில் செயல்பாடு நடைபெற்றதால் அப்போது இம்பீரியல் பில்டிங் என்றே அழைக்கப்பட்டது. ரூ.8.30 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பழைய நாடாளுமன்றம் 70 அடி உயரம், 560 அடி அகலம் கொண்டதாகும். இதில் உள்ள 144 பிரமாண்ட துாண்கள் இதற்கு மேலும் அழகூட்டின. இந்தக் கட்டிடம் இடிக்கப்படாது என்றும், நாடாளுமன்ற தேவைகளுக்காகவே புனரமைப்பு செய்து பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது












Click it and Unblock the Notifications