ஆஹா.. மோடியிடம் இருந்து இப்படி ஒரு பிறந்த நாள் வாழ்த்து.. அதுவும் தமிழில்.. ப சிதம்பரத்துக்குத்தான்
டெல்லி: திஹார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு கடந்த செப்டம்பர் 16ம் தேதி பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து சொல்லி கடிதம் அனுப்பி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் பண மோசடி தடுப்பு சட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ப சிதம்பரம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமீன் கோரிக்கைகள் நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 நாட்களுக்கு மேலாக டெல்லி திஹார் சிறையில் தான் இருக்கிறார் செப்டம்பர் 16ம் தேதி ப சிதம்பரத்திற்கு பிறந்த நாள் ஆகும். அன்றைய நாளிலும் ப சிதம்பரம் டெல்லி திஹார் சிறையில் தான் இருந்தார். இன்று வரை திஹார் சிறையில் தான் ப சிதம்பரம் இருக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி செப்டம்பர் 16ம் தேதி ப சிதம்பரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அவர் தனது கடிதத்தில், உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசிர்வதிக்கட்டும் என கூறியுள்ளார்.
@PMOIndia @narendramodi என் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை பெற்று வியப்பு கலந்த மகிழ்ச்சியடைந்தேன். பிரதமருக்கு நன்றி. pic.twitter.com/HGbWnkCrim
— P. Chidambaram (@PChidambaram_IN) 24 September 2019
இந்த கடிதம் ப சிதம்பரத்தின் காரைக்குடி வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து ப சிதம்பரம் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். அப்போது தான் கடித விவகாரம் தெரியவந்துள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications