Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமரின் அமைதி அவமானம்.. ராணுவத்தினர் பாஜகவின் காவலாளி அல்ல, நாட்டை காப்பவர்கள் - ராகுல் காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களுக்கு முடிதிருத்தம், சலவை, கார் ஓட்டுநர், எலெக்ட்ரிஷியன் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி இருக்கும் மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

இத்திட்டத்தை நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. எதிர்க்கட்சிகளும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, ‛‛அக்னிபாத் ஒரு நல்ல திட்டம். அக்னி வீரராக 4 ஆண்டுகள் பாதுகாப்பு படையில் இருக்கலாம். பணியிலிருந்து அவர்கள் வெளியேறும்போது ரூ.11 லட்சம் வழங்கப்படும். அக்னிவீர் பட்டயமும் வழங்கப்படும். ஒருவேளை பாஜக அலுவலகத்தில் காவலாளர் பணிக்கு ஆள் தேவைப்பட்டால் நான் அக்னிவீரர்களுக்கே முன்னுரிமை அளிப்பேன்'' என்றார்.

ராகுல் காந்தி கண்டனம்

ராகுல் காந்தி கண்டனம்

இதனை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, "விடுதலை பெற்று 52 ஆண்டுகள் மூவர்ணக் கொடியை ஏற்றாதவர்கள், ராணுவ வீரர்களை மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆர்வம் உடையவர்கள், பாஜக கட்சியை காக்க வந்த காவலாளி அல்ல, நாட்டைக் காக்க வந்தவர்கள். பிரதமரின் இந்த அமைதி இந்த அவமானத்தை ஒப்புக் கொள்வதற்கு சமம்." என்று விமர்சித்துள்ளார்.

ஏன் இந்த அக்னிபாத்?

ஏன் இந்த அக்னிபாத்?

இத்திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் அக்னி வீர் என்ற பெயர் கொண்ட வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்கு உட்பட்ட 45 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 6 மாத பயிற்சியளிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஒப்பந்த பணி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் 25% பேருக்கு மட்டும் 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் பணி வழங்கப்படும். மீதம் உள்ள 75 சதவீதம் பேர் எந்தவிதமான ஓய்வூதிய பலனும் இன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். எதிர்ப்பை தொடர்ந்து இந்த வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

கொந்தளித்த இளைஞர்கள்

கொந்தளித்த இளைஞர்கள்

இந்த புதிய திட்டத்துக்கு ராணுவத்துக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகார், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளனர். தெலுங்கானா, உபி, பீகாரில் ரயில்களுக்கு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தீ வைத்தனர். பல இடங்களில் பாஜக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஏன் எதிர்ப்பு?

ஏன் எதிர்ப்பு?

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறவில்லை. ராணுவ பணிக்காக 2 ஆண்டுகளாக பலர் காத்துள்ள நிலையில், ராணுவம் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு கூட 5 ஆண்டுகள் வழங்கப்படும்போது வெறும் 4 ஆண்டுகளை கொண்டு எங்களால் என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் இந்த திட்டம் இளைஞர்களை முட்டாள்களாக்குவதாகும் என இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+