ஐஎஸ்பிஏ: இந்திய விண்வெளி சங்கம்.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..!
இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்
டெல்லி: இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு மீது ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் இது குறித்து கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐஎஸ்பிஏ என்பது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் முதன்மையான தொழில்துறை சங்கம் ஆகும்.. இந்தியாவை தற்சார்புமிக்க, தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாக மற்றும் விண்வெளி அரங்கில் முன்னணியில் இருப்பதற்கு இந்த அமைப்பு உதவி செய்கிறது..
விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட திறன்களை கொண்ட முன்னணி உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களை ஐஎஸ்பிஏ பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அதுமட்டுமல்ல, கொள்கை வாதத்தை மேற்கொள்வதோடு, அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் உட்பட இந்திய விண்வெளி களத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் இந்த சங்கம் இணைந்து செயல்படும்... தற்சார்பு இந்தியா பற்றிய பிரதமரின் தொலைநோக்கு பார்வையை எதிரொலிக்கும் வகையில், இந்தியாவை தற்சார்பு மிக்க, தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாக மற்றும் விண்வெளி அரங்கில் முன்னணி வீரராக ஆக்க இந்த அமைப்பு உதவும்.
லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப் மைஇந்தியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் போன்றோர் இந்த நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.. கோட்ரெஜ், ஹியூஸ் இந்தியா, அஜிஸ்டா-பிஎஸ்டி ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், பிஇஎல், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், மேக்சார் இந்தியா ஆகி போன்ற நிறுவனங்களும் இவற்றின் இதர முக்கிய உறுப்பினர்கள் ஆவார்கள்..
இந்த இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த முக்கிய நிகழ்வில் விண்வெளி துறையின் பிரதிநிதிகளுடன் அவர் உரையாட இருக்கிறார்..
இதுகுறித்து, பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாட்டின் விண்வெளித்துறையின் குரலாக இருக்க விரும்பும் தொழில்துறையினருக்காக இந்திய விண்வெளி சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.. இதன் உறுப்பினர்களாக லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா குழுமம், ஒன்வெப், பார்தி ஏர்டெல் உள்ளிட்டோர் உள்ளனர்.. இவர்கள் விண்வெளித்துறையினர், அரசு, சார்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடியும் ஏற்கனவே ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், "விண்வெளி துறையின் பங்குதாரர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தற்காக மகிழ்ச்சி அடைகிறேன்... உலக விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு மீது ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications