மம்தா தீதி! உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இந்த திடீர் மாற்றம்?.. தேர்தல் வரும் போகும்.. மோடி கிண்டல்
டெல்லி: மம்தா பானர்ஜி ஏன் உங்களுக்கு என்னாச்சு? உங்கள் நிலைப்பாட்டில் ஏன் இந்த திடீர் மாற்றம் என பிரதமர் நரந்திர மோடி தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள், கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி, வெள்ளிக்கிழமை வன்முறை நடந்த டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைந்த தூரத்தில் இருக்கிறது.
எனது உருவபொம்மையை எரியுங்கள்.. பொதுச் சொத்துகளை சேதப்படுத்தாதீர்.. மோடி
விருப்பம்
இந்த பேரணியில் அவர் கூறுகையில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இன்று தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு போராட்டம் நடத்தும் நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுப்பர். எதிர்க்கட்சியினர் அதை செய்யும் விரும்புவர்.
முழங்கிய மம்தா
கொல்கத்தாவிலிருந்து ஐநா சென்றார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்திலிருந்து ஊடுருவோரை தடுத்து நிறுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
ஏன் இந்த மாற்றம்
தீதி உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இந்த மாற்றம்? தவறாக வதந்திரகளை ஏன் பரப்புகிறீர்கள். தேர்தல்கள் வரும் போதும். அதற்கெல்லாம் ஏன் அஞ்சுகிறீர்கள்?
கேள்வி
முஸ்லீம்கள் காவல் மையங்களுக்கு அனுப்பப்படுவர் என காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினரும், நகர்ப்புற நக்ஸல்களும் தவறான தகவலை பரப்புகின்றனர். உங்கள் கல்விக்கு மரியாதை கொடுங்கள். நீங்கள் படித்தவர்கள். என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்டம் குறித்து என்ன இருக்கிறது என்பதை படித்து பாருங்கள் என மோடி தெரிவித்தார்.