குஷியான மோடி.. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி வந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட்
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் நிலையில் நாடு முழுவதிலும் இருந்து அனைத்து கட்சித் தலைவர்களும் வருகை தந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டு உள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற லோக் சபா தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் மோடி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. பாஜக அரசின் பதவிகாலம் நிறைவடைய இன்னும் 10 மாதங்களே உள்ளன.

இந்த நிலையில் 2024 லோக் சபா தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போதே இறங்கிவிட்டன. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியில் போட்டியிடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து முதல் கூட்டம் நடைபெற்றது. அதில்
அனைத்து கட்சிகளும் ஓரணியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை என அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்துடன் கூட்டணிக்கு இந்தியா என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டத்தை மகாராஷ்டிரா அல்லது தமிழ்நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் அதே நாளான இன்று டெல்லியில் தங்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டுகிறது. இதற்காக பெரிய கட்சிகள் மட்டுமின்றி சிறிய சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதற்காக டெல்லி சென்று உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, பாமக, புதிய தமிழகம், ஐஜேகே, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்து உள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சித் தலைவர்களை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "தலைநகர் டெல்லிக்கு நாடு முழுவதிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்துள்ளது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்த கூட்டணி நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும்." என்று குறிப்பிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications