குஷியான மோடி.. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லி வந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட்
டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் நிலையில் நாடு முழுவதிலும் இருந்து அனைத்து கட்சித் தலைவர்களும் வருகை தந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டு உள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற லோக் சபா தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் மோடி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. பாஜக அரசின் பதவிகாலம் நிறைவடைய இன்னும் 10 மாதங்களே உள்ளன.

இந்த நிலையில் 2024 லோக் சபா தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போதே இறங்கிவிட்டன. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியில் போட்டியிடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து முதல் கூட்டம் நடைபெற்றது. அதில்
அனைத்து கட்சிகளும் ஓரணியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை என அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்துடன் கூட்டணிக்கு இந்தியா என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. அடுத்த கூட்டத்தை மகாராஷ்டிரா அல்லது தமிழ்நாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் அதே நாளான இன்று டெல்லியில் தங்கள் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டுகிறது. இதற்காக பெரிய கட்சிகள் மட்டுமின்றி சிறிய சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதற்காக டெல்லி சென்று உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, பாமக, புதிய தமிழகம், ஐஜேகே, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்து உள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தொடங்கி இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சித் தலைவர்களை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "தலைநகர் டெல்லிக்கு நாடு முழுவதிலும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்துள்ளது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்த கூட்டணி நாட்டின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும்." என்று குறிப்பிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications