மொத்தம் 7 டாஸ்குகள்.. மக்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.. மோடி உரையில் அறிவிப்பு
டெல்லி: கொரோனாவை எதிர்த்துப் போராட 7 டாஸ்குகளை பிரதமர் மோடி பட்டியலிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். சுமார் 25 நிமிடங்கள் இந்த உரை நீடித்தது.
Recommended Video
மே மாதம் 3ம் தேதிவரை, நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். அதேநேரம் லாக்டவுன் தற்போது கடைப்பிடித்து வருவது போல ஒரே மாதிரியான தன்மையுடையதாக இருக்காது, என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஏப்ரல் 20-ஆம் தேதி வரை லாக்டவுன் விதிமுறைகள் கடுமையாக அனைத்து இடங்களிலும் கண்காணிக்கப்படும். 20ம் தேதிக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பு வராத இடங்கள், போன்றவற்றை கவனித்து, அந்தந்த மாநில அரசுகள் லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தி, முக்கியமான பணிகளை மறுபடியும் துவங்குவதற்கு அனுமதி அளிக்கலாம் என்றார்.
உரையின் இறுதியில், அவர் 7 டாஸ்குகளை குறிப்பிட்டார்.
- வயதானவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்
- சமூக விலகலை தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சக உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
- ஆரோக்ய சேது ஆப்பை பதிவிறக்குக
- உதவி தேவைப்படுவோரை கவனித்துக் கொள்ளுங்கள்
- வேலைகளில் இருந்து பணியாளர்களை நீக்க கூடாது
- கொரோனாவுக்கு எதிராக போராடி வருவோரை மதிக்கவும்
இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications