நாட்டில் முதல் முறை-இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லி: டெல்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நாட்டின் பிரதமர் ஒருவர் முதல் முறையாக கலந்து கொள்கிறார்.
டெல்லியில் இன்று மாலை 6:30 மணிக்கு சிபிசிஐ மைய வளாகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடத்தும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

கர்தினால்கள், பிஷப்கள் மற்றும் திருச்சபையின் முக்கிய தலைவர்கள் உட்பட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடுவார்.
இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு 1944 -ல் நிறுவப்பட்டது . இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களுடனும் நெருக்கமாக பணியாற்றும் அமைப்பாகும்.












Click it and Unblock the Notifications