Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. 71,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. ரோஜ்கர் திட்டத்தில் பணி நியமனம்.. அசத்திய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ரோஜ்கர் மேளா மூலம் வேலைவாய்ப்பு வழங்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று ஒரேநாளில் மட்டும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் தற்போது வேலையிழப்பு நடந்து வருகிறது. பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தற்போதைய சூழலில் தனியார் நிறுவனங்களில் வேலை உறுதி தன்மை என்பது சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

PM Narendra Modi to distribute 71,000 appointment letters today under Rojgar Mela

இதற்கு விதிவிலக்காக தான் பல இளைஞர்கள், இளம்பெண்கள் அரசு வேலை பெறுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகின்றனர்.மேலும் மத்திய, மாநில அரசு பணிகளை பெறுவதற்கான போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றியும் பெறுகின்றனர்.

இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். ரோஜ்கர் மேளா மூலம் இந்த திட்டம் நிறைவற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

PM Narendra Modi to distribute 71,000 appointment letters today under Rojgar Mela

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதன் தொடர்ச்சியாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

ரயில்வே, போலீஸ், தபால் துறை, வருமான வரித்துறை உள்பட பல்வேறு துறைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் இன்று பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடியிடம் இருந்து பெற உள்ளனர். அதன்பிறகு மத்திய அரசு பணி பெறும் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‛‛இந்த புனிதமான பைசாகி நாளில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் நேற்று 22,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

மேலும் ஆத்மநிர்பர் திட்டம் நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஸ்டார்ட்அப்கள் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளன'' என பிரதமர் மோடி பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+