ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி... சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு முதல் முறையாக பயணம்
டெல்லி: பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24ல் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் சென்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் துவக்கி வைக்க உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை ரத்து செய்தபிறகு அவர் முதன் முதலாக அங்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1992ல் 73வது அரசியலமைப்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் செல்லும் மோடி
அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 24ல் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார். அப்போது அவர் பல தொழில் திட்டங்களை துவங்கி வைக்கிறார். மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதுதவிர மாவட்ட, பஞ்சாயத்து வளர்ச்சி கவுன்சில்களுடன் கலந்துரையாடுகிறார்.

ஏற்பாடு
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் தொழில் முதலீடுகளை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்குவார் என்று கடந்த மாதம் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக அங்கு சென்று வளர்ச்சி பணிகளை துவங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பணிகள் துவங்கி உள்ளன.

ரத்துக்கு பின் முதன் முதலாக
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் , லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு முதன் முதலாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார்.

இதற்கு முன் எப்போது
இதற்கு முன்பு 2019 பிப்ரவரி 3ல் ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லடாக் உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்திருந்தார். அதன்பின் வளர்ச்சி திட்டம் உள்பட பிற காரணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்லவில்லை. மாறாக 2019 அக்டோபர் 27 ல் ரஜோரி, 2021 நவம்பர் 3ல் ஜம்மு நவ்ஷேரா செக்டார் எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications