வேலு நாச்சியார் பிறந்தநாள்.. தமிழில் நினைவுகூறிய பிரதமர் மோடி
டெல்லி: வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன் எக்ஸ் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், 'துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்' என்று கூறியுள்ளார்.
ஆங்கிலேயேர் காலத்தில் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ராணி வேலு நாச்சியார். 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை மீட்டு ராணியாக இருந்தவர். ஆங்கிலேயர்களை வென்ற ஒரே பெண் ராணி என்ற பெருமையை பெற்றவரும் அவரே தான். வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டவர். அதனால் மாநில கட்சிகள் தொடங்கி, தேசிய கட்சிகள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்துவார்கள்.

வேலு நாச்சியாரை தவெக தங்களின் கொள்கை தலைவர்களில் ஒருவராக அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதுரை மேலமடை பகுதியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்திற்கு வேலு நாச்சியாரின் பெயரை சூட்டினார். கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வேலு நாச்சியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் அவரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
வேலு நாச்சியார் பிறந்தநாள்
இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1730 ஜனவரி 3 ஆம் தேதி பிறந்தார். அதன்படி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி அவரின் பெருமைகளை வருகிறார்கள். இந்நிலையில் பிரதமர் மோடி, வேலு நாச்சியாரின் பெருமைகளை தமிழில் நினைவு கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.
நரேந்திர மோடி பதிவு
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்." என்று கூறியுள்ளார்.
இதே பதிவை மோடி தன் எக்ஸ் பக்கத்தில் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
-
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு












Click it and Unblock the Notifications