அது ஸ்டாலின் கருத்து.. தேர்தலுக்கு பிறகுதான் பிரதமரை முடிவு செய்வோம்.. சிபிஐ
பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி: தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யார் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது, பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "கஜா புயல் பாதிப்புக்கு ஒரு வார்த்தை கூட பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை.
ராகுல்காந்தியை பிரதமராக்குவோம். நாட்டை ராகுல் காப்பாற்ற வேண்டும். ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

தேசிய அளவில் ட்ரெண்ட்
மேலும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என்று மேடையிலிருந்த மற்ற தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இரு விதமான கருத்துக்களையும் இது ஏற்படுத்தியுள்ளது.

திரினமூல் காங்கிரஸ்
திரினமூல் காங்கிரஸ் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இது சம்பந்தமான தனது கருத்துக்களையும் கூறி வருகிறர். தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யார் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

சுதாகர் ரெட்டி
அதேபோல, அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தேர்தலுக்கு பின்தான் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, "ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும்.

கூடி முடிவெடுப்போம்
அதுபோல, பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி ஸ்டாலின் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் எங்களை பொறுத்தவரை, தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யார் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
|
ஜனநாயகமா?
தோழமை கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் இவ்வாறு கூறியிருப்பது புதிய கூட்டணியை பலவீனப்படுத்துமா என தெரியவில்லை. இதற்கிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழசையும் கருத்து தெரிவித்துள்ளார். இது ஜனநாயகமா, இது எதேச்சதிகாரம் என அவர் விமர்சித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications