கலவரத்தை தடுக்க மின்சார தகடுடன் கூடிய வன்முறை தடுப்பு கவசங்களுடன் போலீஸ்.. டெல்லியில் ஷாக்!
டெல்லி: கலவரத்தை தடுப்பதற்காக மின்சார தகடுடன் கூடிய வன்முறை தடுப்பு கவசங்களுடன் போலீஸ் சுற்றி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுவடைந்து வருகின்றன. இதில் பெரும்பாலான மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.
லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் என இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தடியடி
டெல்லியில் சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் வெடித்தன. வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் சிலர் போலீஸார் மீது கற்களை வீசி அடிக்கின்றனர். பதிலுக்கு போலீஸாரும் தடியடி நடத்துகின்றனர்.

பற்றாக்குறை
இதனால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மற்ற இடங்களில் கலவரம் நடக்கும் போது போலீஸார் பற்றாக்குறை ஏற்படுகிறது.

கலவரம்
இதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படையினர் முதல் முறையாக வன்முறை தடுப்பு கவசங்களுடன் போராட்டக்களத்தில் இருந்தனர். அந்த கவசத்தில் மின்சார இணைப்பும் கொடுக்கப்படுகிறது. சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் யாரேனும் போலீஸார் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபடும் போது இந்த கவசம் பயன்படுத்துவர்.
கவசங்கள்
இதை தொட்டால் 12 வோல்ட் மின்சாரம் பாயும். குறைந்த போலீஸாரை கொண்டு வன்முறையை கட்டுப்படுத்த இது சுலபமான வழியாகும். தற்போது வரை இவை பாலி கார்பனேட் கவசங்களாகவே பயன்படுத்தப்பட்டு வந்தன.












Click it and Unblock the Notifications