பிரதமர் மோடி மீது விதிமீறல் புகார் மாயம்... 'சிறிய தடுமாற்றம்' என சமாளித்த தேர்தல் ஆணையம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தல் விதிமீறல் புகார்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. தற்போது வரை 3 கட்டங்களாக தேர்தல் நடந்துள்ளது. வரும் மே 19ம் தேதியுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இணையத்தில் வெளியீடு
அப்படி பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தேர்தல் விதிமுறைகளை பேசியவர்கள் மற்றும் செயல்பட்டவர்கள் மீது தேர்தல் விதிமீறல் புகார்கள் கொடுக்கப்பபடுகிறது. அப்படி பதிவான விதிமீறல் புகார்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது.

மோடிக்கு எதிராக புகார்
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் புல்வாமா தாக்குதல், மற்றும் பால்கோட் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி பேசினார். இது தொடர்பாக தேர்தல் விதிமீறல் புகார் பிரதமர் மோடி மீது ஏப்ரல் 9ம் தேதி கொடுக்கப்பட்டது.

மோடி மீதான புகார் மாயம்
இந்நிலையில் இந்த புகார் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்ட தேர்தல் விதிமீறல் புகார் பட்டியலில் 426 புகார்கள் காணப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி மீது புகார்கள் மட்டும் மாயமாகி இருந்தது.

புகார் குறித்து கேள்வி
இதுதொடர்பாக மோடிக்கு எதிராக புகார் கொடுத்த கொல்கத்தாவைச் சேர்ந்த மகேந்திரசிங் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், தேர்தல் விதிமீறல் தொடர்பான "சரியான பட்டியல்" தொழில்நுட்ப தவறுகள் காரணமாக இணையதளத்தில் வெளியாகவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

இன்று விளக்கம்
மகாராஷ்டிரா தேர்தல் அதிகாரி பிரதமர் மோடிக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து வருவதாகவும், அவர் இன்று பிற்பகல் 1 மணி அளவில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications