உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படும் எண்ணம் துளியும் இல்லை: ஒரே போடு போட்ட ஆளுநர் ரவி!
டெல்லி: பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தமக்கு துளியும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அமைச்சராக பதவி வகித்த திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. மேலும் பொன்முடி வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தமக்கும் மனைவி விசாலாட்சிக்கும் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இதனால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டார். அவரது தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பும் வாபஸ் பெறப்பட்டது. அத்துடன் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பினார். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ, பொன்முடி மீது ஊழல் கறை படிந்துள்ளது; அவருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என மறுத்தார். அத்துடன் பொன்முடிக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதே தவிர ரத்து செய்யவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தமது கருத்தை முன்வைத்தது.
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டப் போராட்டத்தை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு மேற்கொண்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று ஆளுநர் ரவிக்கு சரமாரி கண்டனம் தெரிவித்தது. மேலும் பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க நாளை வரை அவகாசம் வழங்குகிறோம்; பொன்முடி விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் தமது முடிவை தெரிவிக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது தெரிவிக்கப் போவது இல்லை; தண்டனையை நிறுத்தி வைத்துவிட்ட பின்னர் எந்த அடிப்படையில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்கிறார் ஆளுந ரவி? பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ரவி நாளைக்குள் முடிவு எடுத்து தெரிவிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்.
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ஆளுநர் கூற முடியும்? பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என சொல்லும் அதிகாரத்தை ஆளுநர் ரவிக்கு யார்தான் கொடுத்தது? ஆளுநர் அரசியல் சாசனத்தைப் பின்பற்றவில்லை எனில் மாநில அரசு என்னதான் செய்யும்? என்றெல்லாம் அடுக்கடுக்கான கோபக் கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்வைத்தது.
இதனையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆளுநர் தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தமக்கு துளியும் இல்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் அப்படியான ஒரு முடிவை ஆளுநர் எடுக்க நேர்ந்தது. தற்போது பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications