எவ்வளவு நல்ல தகவல்.. நாட்டின் 78 மாவட்டங்களில் 14 நாட்களாக கொரோனா பாதிப்பே இல்லை
டெல்லி: நாட்டின் 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக கொரோனா பாதிப்பு எதுவுமே இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12 மாவட்டங்களில் 28 நாட்களாக கொரோனா பாதிப்பே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21, 393 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4,257 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியும் உள்ளனர். நாட்டின் 12 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை.
அதேபோல் 23 மாநிலங்களின் 78 மாவட்டங்களில் கடந்த 24 நாட்களாக ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு லாவ் அகர்வால் கூறினார்.












Click it and Unblock the Notifications