பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக
டெல்லி ஆர் ஆர் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி (84). இவர் மத்திய நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார். இவர் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
Recommended Video
இவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த திங்கள்கிழமை மூளையில் ரத்தக் கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டது.
இந்த நிலையில் அவர் தொடர்ந்து செயற்கை சுவாசி கருவி மூலமே சுவாசம் கொடுக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பும் இருக்கிறது. இதுகுறித்து ஆர் ஆர் ராணுவ மருத்துவமனை கூறுகையில் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் மிகப் பெரிய ரத்தக் கட்டி இருந்தது. இது கடந்த திங்கள்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் வீட்டில் குளியல் அறையில் வழுக்கி விழுந்ததாகவும் உறவினர்கள் கூறினர். அதனால் மூளையில் ரத்தம் கட்டிவிட்டது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்று நலம் விசாரித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரணாபின் மகள் ஷர்மிஸ்தாவிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பிரணாப் உடல்நிலை சீராக வேண்டிய பலர் பிரார்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். சமூகவலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது












Click it and Unblock the Notifications