தமிழ் புத்தாண்டு தினம்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து
டெல்லி: சித்திரை 1-ம் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், தமிழ் புத்தாண்டை போல பல்வேறு மாநிலங்களில் விஷு, பைசாகி, பிஹு பண்டிகைகளும் இன்று கொண்டாடப்படுகின்றன.

இதையொட்டி தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு, பைசாகி, பிஹு பண்டிககையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'பைசாகி, விஷு, பிஹு, நபா பர்ஷா, வைஷாகாதி மற்றும் தமிழ் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான இந்த தருணத்தில், அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான பண்டிகைகள் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், குடிமக்களிடையே நல்லிணக்க உணர்வைப் பரப்புவதற்கும் நம்மை ஊக்குவிக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications