பிரக்ஞானந்தா உள்பட தமிழகத்தின் 3 பேருக்கு அர்ஜூனா விருது! சரத் கமலுக்கு கேல்ரத்னா! வழங்கிய ஜனாதிபதி
டெல்லி: சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட 3 பேருக்கு அர்ஜூனா விருதும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று வழங்கினார்.
சர்வதேச போட்டிகளில் சாதித்து பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி சாதனை படைக்கும் வீரர்களுக்கு தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகின்றன.

மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது
இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஒருவர் ஆவார். சென்னையை சேர்ந்த சரத் கமல் இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

அர்ஜூனா விருது
இதேபோல் 25 பேருக்கு அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தமிழகத்தின் கடலூரை பூர்வீகமாக கொண்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில், மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்டவர்களுக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.

விருது வழங்கிய ஜனாதிபதி
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி திரெளபதி முர்மு வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கினார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல், பிரக்ஞானந்தா, இளவேனில், ஜெர்லின் அனிகா உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து விருதுகளை பெற்று கொண்டனர்.

யார் இவர்கள்?
இதில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022ல் இந்தியாவுக்கு 3 தங்கள், ஒரு வெள்ளிப்பதக்கத்தை பெற்று தந்தார். இதேபோல் பல்வேறு வகையான செஸ் போட்டிகளில் பதக்கங்களை குவித்த இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு போட்டிகளில் சாதித்த வீராங்கனை இளவேனில் உள்ளிட்டவர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. மேலும் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவியான ஜெர்லின் அனிகாவுக்கு வயது 17 தான். இவர் பிரேசிலில் நடைபெற்ற பாரா-ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications