இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸுடன் பிரதமர் மோடி பேச்சு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லி: இங்கிலாந்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் லிஸ் டிரசுடன் பிரதமர் மோடி இன்று பேசினார். தொலைபேசி வாயிலாக இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.
இங்கிலாந்தில் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை அடுத்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாகியுள்ளார்.
புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ்சுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேசினார்.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்த உரையாடலின் போது, இங்கிலாந்து பிரதமராக தேர்வு ஆகியுள்ள லிஸ் டிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கலும் பிரதமர் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள லிஸ் டிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் கூறினார்.

விரிவாக ஆலோசனை
இதற்கு முன்பு வர்த்தக அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருந்த போது இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரு தரப்பு உறவுகளுக்காக லிஸ் டிரஸ் அளித்த பங்களிப்புகளையும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். மேலும் இரு தலைவர்களும் இருநாடுகளின் உறவுகள் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்கான விரிவான திட்டத்தை அமல்படுத்துதல், வர்த்தக பேச்சுவார்த்தைகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடு ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

லிஸ் டிரஸ் நன்றி
130 கோடி இந்தியர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடியின் ஆழ்ந்த இரங்கலுக்கு பிரதமர் லிஸ் டிரஸ் நன்றி தெரிவித்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவின் முக்கியத்துவம் குறித்தும் விரைவில் நேரடியாக சந்தித்துக்கொள்வதை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பேச்சுவார்த்தை
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடியும், லிஸ் டிரசும் பேசிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications