இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸுடன் பிரதமர் மோடி பேச்சு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லி: இங்கிலாந்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் லிஸ் டிரசுடன் பிரதமர் மோடி இன்று பேசினார். தொலைபேசி வாயிலாக இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.
இங்கிலாந்தில் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை அடுத்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாகியுள்ளார்.
புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ்சுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக பேசினார்.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்த உரையாடலின் போது, இங்கிலாந்து பிரதமராக தேர்வு ஆகியுள்ள லிஸ் டிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கலும் பிரதமர் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள லிஸ் டிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் கூறினார்.

விரிவாக ஆலோசனை
இதற்கு முன்பு வர்த்தக அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருந்த போது இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரு தரப்பு உறவுகளுக்காக லிஸ் டிரஸ் அளித்த பங்களிப்புகளையும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். மேலும் இரு தலைவர்களும் இருநாடுகளின் உறவுகள் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்கான விரிவான திட்டத்தை அமல்படுத்துதல், வர்த்தக பேச்சுவார்த்தைகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடு ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

லிஸ் டிரஸ் நன்றி
130 கோடி இந்தியர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பிரதமர் மோடியின் ஆழ்ந்த இரங்கலுக்கு பிரதமர் லிஸ் டிரஸ் நன்றி தெரிவித்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவின் முக்கியத்துவம் குறித்தும் விரைவில் நேரடியாக சந்தித்துக்கொள்வதை எதிர்நோக்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பேச்சுவார்த்தை
பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடியும், லிஸ் டிரசும் பேசிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராகும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications