மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்... சொல்லி அடித்த பிரதமர் மோடி!!
லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தேர்தல் பிரச்சாரங்களின்போது பிரதமர் மோடி கூறியிருந்தது உண்மையாகி உள்ளது.
டெல்லி:லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி இருக்கிறது.
பிரதமர் மோடியை பொது எதிரியாக கூறி வேலை செய்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மண்ணை கவ்வியுள்ளன. இந்த நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தது இன்று நிரூபணமாகி இருக்கிறது.

தேர்தல் பிரச்சார் கூட்டங்களில் பேசும்போது பிரதமர் மோடி, பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். அத்துடன், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் கூட இந்த தேர்தலில் கிடைக்காது என்று கூறியிருந்தார்.
அது அப்படியே இன்று நடக்கிறது. இதேபோன்று, மத்திய உள்துறை ராஜ்நாத் சிங்கும் அண்மையில் இதே கருத்தை கூறி இருந்தார். பாஜக மூன்றில் இரு பங்கு தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறி இருந்தார். அதாவது, கடைசிக் கட்ட தேர்தல்களுக்கு முன்பே இந்த கருத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கூறி இருந்தனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படியே, இப்போது தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன.
இந்த நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டால், அமைச்சரவையில் இடம் கேட்டு அழுத்தம் கொடுத்து கேட்கலாம் என்று காத்திருந்த கூட்டணி கட்சிகளின் கனவு தேர்தல் முடிவுகளால் கானல் நீராகிவிட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகள் கூட 2014ம் ஆண்டு போன்று அதிக இடங்கள் கிடைக்கும் என்று நம்பவில்லை.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications