Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் இறந்த கர்நாடக மாணவர்.. பெற்றோருக்கு போனில் பிரதமர் மோடி ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 6 நாட்களாக போரிட்டு வருகிறது. கட்டடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. தநைர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா முன்னேறி வருவதால் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் சொந்த ஊர், உடைமைகளை கைவிட்டுவிட்டு உயிர் பயத்தில் அண்டை நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

கர்நாடக மாணவர் பலி

கர்நாடக மாணவர் பலி

இந்நிலையில் இன்று காலை உக்ரைன் நாட்டின் 2வது மிகப்பெரிய நகரான கார்கிவ்வில் ரஷ்ய ராணுவம் /வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியானார். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சாலக்கேரி கிராமத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்தது. உக்ரைனில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த நிலையில் இன்று காலை மளிகை கடையில் வரிசையில் நின்றபோது ரஷ்யாவின் தாக்குதலில் குண்டு பாய்ந்து பலியானார்.

மோடி ஆறுதல்

மோடி ஆறுதல்

நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடாவை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆறுதல் கூறினார். முன்னதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நவீனின் தந்தையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ‛‛இது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. நவீனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். தூதர அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்'' எனக்கூறினார். இதற்கிடையே நவீன் உயிரிழந்தை அறிந்து அவரது உறவினர்கள் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை

இந்தியர்களுக்கு எச்சரிக்கை

ஒவ்வொரு நிமிடமும் உக்ரைனின் நிலைமை மோசமாகி வருகிறது. கீவ் நகரில் நுழையும் நோக்கில் ரஷ்ய வீரர்கள் அதன் புறநகர் பகுதியை அடைந்துள்ளனர். இங்கு உக்ரைன் ராணுவமும் தயாராக உள்ளது. இதனால் இருதரப்புக்கும் மோதல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் இந்தியா அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

மீட்பு பணி விரைவு

மீட்பு பணி விரைவு

மேலும் ஆபரேஷன் கங்கா எனும் இந்தியாவின் மீட்பு நடவடிக்கையும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.மீட்பு பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட உள்ளது. இந்த விமானங்கள் தனியார் விமானங்களுடன் இணைந்து உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+