ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்.. பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
டெல்லி: சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி உள்பட ஐந்து மாநில மக்களுக்கும் அவரவர் மொழியில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பிரதமர் மோடி தமிழில் ட்விட் பதிவிட்டு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது பதிவில், தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் புதுச்சேரி வாக்காளர்களுக்காக வெளியிட்டுள்ள பதிவில் இன்று நடைபெறும் தேர்தலில் அதிகளவில் வாக்களிக்குமாறு புதுச்சேரி மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதேபோல் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications