பிரியங்கா அல்லது சச்சின்.. இருவரில் ஒருவர்தான் வர வேண்டும்.. காங்கிரஸ் தலைவராக போவது யார்?
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக போகும் நபர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக போகும் நபர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இன்று காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதால், இந்த கேள்விக்கு அதிக முக்கியத்துவம் எழுந்துள்ளது.
சுதந்திர இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக வலம் வந்து கொண்டு இருந்த காங்கிரஸ் தற்போது மிக மோசமான காலகட்டத்தில் இருக்கிறது. முக்கியமாக அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள் அந்த கட்சியை பாதித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், கட்சியில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள்.
இன்று மீட்டிங்
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக இன்று முக்கிய மீட்டிங் டெல்லியில் நடக்க உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே சி வேணுகோபால் தலைமையில் இந்த மீட்டிங் நடக்க உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பேர்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இன்று இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இன்று இடைக்கால தலைவரை தேர்வு செய்துவிட்டு கட்சி உறுப்பினர்களின் ரியாக்சன் எப்படி இருக்கிறது என்று பார்க்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. அதன்பின், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
யார் வரலாம்
அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக பிரியங்கா காந்தி வர வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். சசி தரூர், கரண் சிங், அமரீந்தர் சிங் ஆகியோர் கட்சிக்கு பிரியங்காதான் தலைவராக வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களின் இந்த கோரிக்கையை அடுத்து பிரியங்காவின் பக்கம் எல்லோரின் பார்வையையும் திருப்பி உள்ளது.
சச்சின் பைலட்
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் இன்னொரு இளம் தலைவர் சச்சின் பைலட், அக்கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் சச்சின் பைலட் பாஜகவிற்கு உதவியது போல, அவர் தேசிய அளவில் முக்கிய விதத்தில் கட்சியில் பணியாற்றுவார் என்றும் கூறுகிறார்கள். இதனால் இந்த இரண்டு பேருக்கும் இடையில் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும் என்கிறார்கள்.