மோடி பிரதமர் இல்லையாம்.. புதிதாக ஒரு பெயர் சூட்டிய பிரியங்கா காந்தி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிதாக ஒரு பெயரை சூட்டியுள்ளார், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. எனவே உத்தர பிரதேச மாநிலம்தான், மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய மாநிலமாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 26 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.
இந்த நிலையில்தான், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். பன்டேல்கன்ட் பகுதிக்குட்பட்ட சில தொகுதிகளிலும், ஃபதேபூரிலும் இன்று பேரணி மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.

மக்கள் விருப்பம்
அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் கொள்கை எப்போதுமே, மக்களின் எண்ணங்களுடன் ஒத்துப்போகக் கூடியது. பாஜகவின் கொள்கை மக்கள் எண்ணங்களுக்கு நேர் எதிர்மறையானது. பாஜக மக்கள் பிரச்சினைகளில் இருந்து விலகியே நிற்கிறது. மோடி தனது பதவிக்காலத்தின் அதிக நாட்களை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கழித்துவிட்டு சாதாரண மக்களை எப்போதாவதுதான் சந்தித்தார்.

ஏழை மக்களுக்கு உதவி
பணமதிப்பு நீக்கம் சாமான்ய மக்களைதான் பாதித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும், அந்த நடவடிக்கையால் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். ஆனால், கறுப்புப் பணம் ஏதும் மீட்கப்படவில்லை. பாஜக அரசு பெரும் முதலாளிகளின் கடனைத் தள்ளுபடி செய்த மதிப்பு ரூ.5,50,000 கோடி. ஆனால், காங்கிரஸ் கட்சி, அரசு பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுப்பதற்காக 'நியாய்' திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

தண்ணீர்
மோடி நாளை இங்கு வருவதால் மக்கள் பயன்படுத்த வேண்டிய பொது குடிநீரை வைத்து பாஜகவினர் சாலைகளை கழுவி வருகின்றனர். ஒரு பக்கம் ஆண், பெண், பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகள், விவசாய பயிர்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் இங்கு தவிக்கும்போது, இது அவசியமா? இந்த நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும் டெல்லியில் இருந்துவரும் மகாராஜா வருகைக்காக குடிநீரை பாஜகவினர் வீணடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பிரச்சார் மந்திரி
பிரதமர் நரேந்திர மோடி, பெரு முதலாளிகள் துணையுடன், தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு உள்ளார். அவர் பிரதான் மந்திரி இல்லை. 'பிரதான் பிரச்சார் மந்திரி'. இவ்வாறு அவர் பேசினார். மோடி பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் சிறப்பு பேட்டி நிகழ்ச்சியொன்றில் இன்று பங்கேற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications