ரயிலில் வந்த 1,000 பஞ்சாப் விவசாயிகள்... டெல்லிக்குள் செல்லாமல் மும்பை நோக்கி சென்றதால் பரபரப்பு!
டெல்லி: டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயணித்த ரயில் புதுடெல்லிக்குள் நுழையாமல் மும்பை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 26-ந் தேதி நிகழ்ந்த சம்பவங்களைத் தொடர்ந்து சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன.

டெல்லியில் தொடர் போராட்டம்
இருப்பினும் டெல்லியில் இன்னமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களை தொடருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சாப் மெயில் ரயிலில் பயணித்தனர்.

பஞ்சாப் மெயிலில் பயணம்
இந்தியாவின் மிக பழமையான ரயில்களில் பஞ்சாப் மெயிலும் ஒன்று. பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் இருந்து டெல்லி வழியாக மும்பைக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உபி, மபி வழியாக மும்பையை இந்த ரயில் சென்றடையும்.

டெல்லிக்குள் செல்லவில்லை
இந்த ரயிலில்தான் 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயணம் செய்தனர். இந்த ரயில் இன்று காலை ஹரியானாவின் ரோக்டாக் ரயில் நிலையத்தை கடந்து புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஹரியானாவின் ரேவாரியில் இருந்து மாற்றுப் பாதையில் மும்பை நோக்கி பஞ்சாப் மெயில் ரயில் திரும்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

யோகேந்திர யாதவ் புகார்
ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவரான யோகேந்திர யாதவ் இன்று காலை தமது ட்விட்டர் பக்கத்தில், ரோக்டாக்கில் இருந்து ரேவாரிக்கு 1,000 பஞ்சாப் விவசாயிகளுடன் ரயில் திருப்பிவிடப்பட்டதாகவும் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க விடாமல் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

வடக்கு ரயில்வே மறுப்பு
ஆனால் வடக்கு ரயில்வே நிர்வாகமோ, ரயிலை இயக்குவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் காரணமாகவே மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதாக விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications