சிறுவன் கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பூவை ஜெகன்மூர்த்தி!
சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் மற்றும் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் விஜயஸ்ரீ-க்கு ரூ.500 கோடி அளவிற்கு சொத்துகள் இருப்பதாக தெரிய வந்தது. இதன் காரணமாக பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பிய குடும்பத்தினர், இளைஞர் தனுஷின் தம்பியை கடத்தினர்.

பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்பு?
இதுதொடர்பாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் நடந்த விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்ஜாமீன் கோரி மனு
அதிலும் சிறுவனின் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம் கார் கொடுத்தது தெரிய வந்த நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்கள் போலீசாரை நீண்ட நேரம் அனுமதிக்கவில்லை. இதனால் தாம் கைது செய்யப்படலாம் என்பதால், முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
கடத்தலுக்கு மூளை
இந்த வழக்கின் விசாரணையின் போதே பூவை ஜெகன்மூர்த்தியை விசாரணைக்கு போலீசாரின் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன்பின் அவரிடம் ஒருநாள் விசாரிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சிறுவனின் கடத்தலுக்கு மூளையாக பூவை ஜெகன்மூர்த்தி செயல்பட்டுள்ளார்.
காவல்துறை எதிர்ப்பு
ஏற்கனவே சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான 5 பேருடன் பூவை ஜெகன்மூர்த்தி இருக்கும் காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்ய அனுமதிக்க வேண்டும். அவருக்கும் ஏடிஜிபி ஜெயராமுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரிக்க வேண்டும். அதனால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
இதன்பின் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இதன் காரணமாக பூவை ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையறிந்த பூவை ஜெகன்மூர்த்தி மீண்டும் தலைமறைவாகினார். இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications