ரபேல் பேரத்தில் மோடி தலையிட்டது உண்மைதானா? பாரிக்கரின் ''நோட்'' வெளியானதால் பரபரப்பு!
ரபேல் ஊழல் தொடர்பாக காலையில் வெளியான கடிதத்தின் இன்னொருபக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது.
Recommended Video

டெல்லி: ரபேல் ஊழல் தொடர்பாக காலையில் வெளியான கடிதத்தின் இன்னொருபக்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்திற்கு அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் இதில் இடம்பெற்றுள்ளது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளியாகி உள்ள பாதுகாப்பு துறையின் கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது ரபேல் பிரச்சனை மீண்டும் உயிர் பெற்று இருக்கிறது.
இந்த கடிதம் பாதுகாப்பு துறை அதிகாரிகளால், பாதுகாப்பு அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதம் ஆகும். இதுதான் தற்போது வெளியே கசிந்து உள்ளது.

என்ன இருக்கிறது
அந்த கடிதத்தில் பிரதமர் மோடி, ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, தனியாக ரபேல் தொடர்பான பேரத்தை மறைமுகமாக பிரான்ஸ் நாட்டுடன் நடத்தினார். வேறு சிலர் பயன் அடைய வேண்டும் என்று தனி பேரத்தை பேசினார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவை மீறி பிரதமர் மோடி ஆலோசனை செய்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

முழு கடிதம்
தற்போது இது தொடர்பான முழு கடிதம் வெளியாகி இருக்கிறது. அதாவது அந்த கடிதத்தில், கீழ் பகுதியில் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் இதில் இடம்பெற்று இருக்கிறது. இந்த புகாருக்கு அதே கடிதத்தில் மனோகர் பாரிக்கர் பதில் எழுதி உள்ளார். அதன் விவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
|
என்ன பதில்
அதில் மனோகர் பாரிக்கர் அளித்திருக்கும் பதிலில், இந்த விஷயம் தொடர்பாக கடிதம் எழுதி இருக்கும் மோகன் குமார், பிரதமர் அலுவலகத்துடன் பேச வேண்டும். பிரதமர் மோடியிடம் பேசி இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுங்கள், என்று அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

உறுதியாகிறது
இதனால் தற்போது பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தில் தலையிட்டு இருக்கிறார் என்பது உறுதியாகிறது என்கிறார்கள். பிரதமர் தலையிட்டதன் காரணத்தால்தான், பாதுகாப்பு துறை அமைச்சர், பிரதமர் மோடியுடன் பேசி சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறினார் என்கிறார்கள். பிரதமர் மோடி தலையிடவில்லை என்றால், அவர் அப்படி பதில் அளிக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications