நாங்க காசு கொடுப்போம்.. ஆனா அவங்க ஜெட் கொடுக்கணும்னு கட்டாயமில்ல.. அதிர வைத்த ரபேல் ஒப்பந்த ஓட்டை!
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மிக முக்கியமான உண்மை ஒன்றை நேற்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மிக முக்கியமான உண்மை ஒன்றை நேற்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள்.
ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது.
[ரஃபேல் ஒப்பந்தம் அரசுகளுக்கு நடுவே நடந்ததே கிடையாது.. ஒரே போடாக போட்ட கபில் சிபல்]

கேள்வி கேட்டார்
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் மனு தாரர் பிரஷாந்த் பூஷன் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் ''மத்திய அரசு செய்திருக்கும் ரபேல் ஒப்பந்தத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது. இதில் விமானங்களை அளிக்க வேண்டிய டாஸால்ட் நிறுவனம், விமானத்தை கட்டாயமாக அளிக்க வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. அவர்கள் ஏமாற்றிவிட்டால் மத்திய அரசு என்ன செய்யும்'' என்று கேள்வி எழுப்பினார்.

மிக மோசமான பதில்
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு ''நாங்கள் ஒப்பந்தத்தில் விமானங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று எங்குமே குறிப்பிடவில்லை. ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்த இடத்திலும் நாங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் கண்டிப்பாக விமானத்தை அளிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை'' என்று மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய பதிலை மத்திய அரசு அசால்ட்டாக கூறியது.

கோபம் கொண்டனர்
இதனால் கோபம் கொண்ட நீதிபதிகள், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையில் இப்படியா பதில் அளிப்பது. அந்த டாஸால்ட் நிறுவனம்,பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டால் என்ன செய்வீர்கள். விமானம் இல்லை, ராணுவம் வலிமையாக இல்லை என்று கூறிவிட்டு அதை வலிமையாக்க செய்த ஒப்பந்தத்தை இப்படியா மோசமாக வடிவமைப்பது என்று கோபமாக கேட்டனர்.

இன்னும் மோசமான பதில்
இதற்கு மத்திய அரசு இன்னும் மோசமான பதிலை அளித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் அரசு இதில் எல்ஓசி (Letter of Comfort) கொடுத்துள்ளது. இதில் பிரான்ஸ் அரசு ஒப்பந்த முறைகளை பின்பற்றும் என்று கூறியுள்ளது என்று சமாளிக்க பார்த்தார். அதற்கு நீதிபதிகள், ஒப்பந்த படிவத்திலேயே விமானத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று வரி இல்லாத போது, விமானம் எப்படி இந்தியாவிற்கு கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications