மாஸ் மகிழ்ச்சி.. சமூக வலைதளங்களில் 'எம்.பி' என மீண்டும் மாற்றிய ராகுல் காந்தி- காங். கொண்டாட்டம்!
டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து லோக்சபா எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது சமூக வலைதளப் பக்கங்களில் மீண்டும் 'நாடாளுமன்ற உறுப்பினர்' என இணைத்து மாற்றி உள்ளார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்த விவகாரம் ராகுல் காந்திக்கு மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. மோடி பெயர் தொடர்பான விமர்சனத்தால் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனையடுத்து ராகுல் காந்தியின் லோக்சபா எம்.பி. பதவி உடனே பறிக்கப்பட்டது; எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலேயே அவருக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது.
குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிம்ன்றம், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தியின் பறிக்கப்பட்ட எம்.பி. பதவி மீண்டும் உடனே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று லோக்சபா செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை திரும்ப வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தி எம்.பி.யாக மீண்டும் திரும்பினார். ராகுல் காந்தி எம்.பி. பதவி திரும்ப வழங்கப்பட்டதை காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதனிடையே ராகுல் காந்தி தமது சமூக வலைதளங்களில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட உடன் முன்னாள் எம்.பி. என பதிவு செய்திருந்தார். தற்போது அதனை திருத்தி நாடாளுமன்ற உறுப்பினர் என மீண்டும் இணைத்துள்ளார்.
-
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications