சுஷ்மா ஒரு அசாதாரணமான தலைவர்.. மிகச் சிறந்த பேச்சாளர்.. மரணம் வேதனை தருகிறது.. ராகுல்
Recommended Video
டெல்லி: சுஷ்மா சுவராஜ் ஒரு அசாதாரணமான தலைவர். மிகச் சிறந்த பேச்சாளர். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
சுஷ்மா சுவராஜின் திடீர் மரணம் கட்சிகளைக் கடந்து அனைத்து இந்தியாவையும் அதிரவைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சுஷ்மாவின் மரணம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், சுஷ்மா சுவராஜின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு அசாதாரணமான தலைவர். மிகச் சிறந்த பேச்சாளர். அருமையான நாடாளுமன்ற வாதி. கட்சி பாகுபாடில்லாமல் அனைவருடனும் நட்பு பாராட்டியவர்.
I’m shocked to hear about the demise of Sushma Swaraj Ji, an extraordinary political leader, a gifted orator & an exceptional Parliamentarian, with friendships across party lines.
— Rahul Gandhi (@RahulGandhi) August 6, 2019
My condolences to her family in this hour of grief.
May her soul rest in peace.
Om Shanti 🙏
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று இரங்கல் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!
அமித் ஷா இரங்கல்
पूर्व विदेश मंत्री और भाजपा की वरिष्ठ नेता व संसदीय बोर्ड की सदस्य श्रीमती सुषमा स्वराज जी के आकस्मिक निधन से मन अत्यंत दुखी है।
— Amit Shah (@AmitShah) August 6, 2019
उन्होंने एक प्रखर वक्ता, एक आदर्श कार्यकर्ता, लोकप्रिय जनप्रतिनिधि व एक कर्मठ मंत्री जैसे विभिन्न रूपों में भारतीय राजनीति में अपनी अमिट छाप छोड़ी है।
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாஜக தலைவருமான சுஷ்மா சுவராஜின் மரணம் மனதுக்கு பெரும் வேதனையைத் தந்துள்ளது. இந்திய அரசியலில் தனி முத்திரையைப் பதித்து விட்டு அவர் சென்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர், கொள்கைப் பிடிப்பாளர், மக்களுக்காக சிறந்த சேவையாற்றியவர், நல்ல அமைச்சர் என பல முத்திரைகள் அவருக்கு உண்டு என்று கூறியுள்ளார் அமித் ஷா.