ஜூன் 4ல் ஆட்சி மாற்றம்! ஆக்.15ல் 30 லட்சம் அரசு வேலையை நிரப்பும் பணி தொடக்கம்! ராகுல் காந்தி உறுதி
டெல்லி: ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து 4ம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், வரும் ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியிலிருந்து காலியாக உள்ள 30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். அதாவது,
"இந்தியாவின் இளைஞர்களே, ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலியாக உள்ள அரசுப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தொடங்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். நரேந்திர மோடியின் தவறான பொய் பிரசாரத்தால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம். வேலை வாய்ப்பை தேர்ந்தெடுங்கள் வெறுப்பை அல்ல" என்று தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வேலையின்மை குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 30 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக vs காங்கிரஸ் கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன. ராகுல் காந்தி அம்பானி, அதானியிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்கள் மீது விமர்சனம் வைக்காமல் தவிர்த்து விடுகிறார் என்று மோடி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், அம்பானி, அதானி குறித்து ராகுல் காந்தி விமர்சித்து பேசிய வீடியோவை தேதி வாரியாக வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications