இருந்து பாடம் கற்று கொடுத்திருக்க வேண்டும் சுஜித்.. தமிழிசை ஆற்றாமை
குழந்தை சுஜித்தின் மறைவு அதிர்ச்சி தருகிறது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்
Recommended Video
டெல்லி: குழந்தை சுஜித்தின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கலும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
எல்லோரையும் தவிக்கவிட்டு விட்டு போய் விட்டான் குழந்தை சுஜித். கண் முன்னாடி அவனை பறி கொடுத்த துயரத்தில் தமிழகமே சோகமாக உள்ளது. குழந்தையின் மறைவு குறித்து மக்கள் ஆற்றாமையுடன் உள்ளனர்.
பல்வேறு கட்சித் தலைவர்களும் குழந்தை சுஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவரும் அந்த வகையில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுஜித்தை பத்திரமாக மீட்க கோரி அவர் டிவீட் போட்டிருந்தார்.
I’m sorry to hear about the passing of baby Sujith. My condolences to his grieving parents and his family.
— Rahul Gandhi (@RahulGandhi) October 29, 2019
#RIPSujith
இதுதொடர்பாக ராகுல் காந்தி போட்டுள்ள டிவீட்டில், "பேபி சுஜித் மறைவுச் செய்தி கேட்டு வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
சுஐித் மரணம்..வேதனைஅளிக்கிறது
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) October 29, 2019
இருந்து..உலகிற்கு...பாடம் கற்பிக்காமல்இறந்துபாடம்கற்பித்துள்ளான் கண்ணீர்அஞ்சலி
இதேபோல மேலும் பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும் இரங்கல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழிசை ஒரு டிவீட் போட்டுள்ளார்.
தமிழிசை போட்டுள்ள டிவீட்டில், "சுஐித் மரணம்.. வேதனை அளிக்கிறது.. இருந்து உலகிற்கு பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான் கண்ணீர் அஞ்சலி" என்று போட்டுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.
குழியில் இருந்து வந்த நாற்றம்.. சுரங்கத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர் அஜித்குமார்.. சொன்னது என்ன?
என்ன ஆறுதல் சொல்லி என்ன.. ஒரு பச்சைக் குழந்தையை அநியாயமாக பறி கொடுத்து விட்டோம்.