நான் உங்களுடன் இருக்கிறேன் என உணர்த்தவே வயநாட்டில் போட்டி.. ராகுல் பரபரப்பு விளக்கம்
Recommended Video

டெல்லி: நான் உங்களுடன் இருக்கிறேன் என காட்டவே வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது தந்தை ராஜீவ் காந்தியின் தொகுதியான அமேதியில் ராகுல் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.

இந்நிலையில் தென்னிந்தியாவில் ஏதாவது ஒரு தொகுதியிலும் ராகுல் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விரும்பினர். அதன்படி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது அவர் கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் 54 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி இந்த கேள்விக்கான விளக்கத்தையும் அளித்தார். அவர் கூறுகையில் தென்னிந்தியாவில் போட்டியிடுமாறு பல தரப்பினர் என்னை வலியுறுத்தினர்.
தங்களை கவனிக்க யாரும் இல்லை என்பதே தென்னிந்திய மக்களின் கவலையாகும். அதிலும் பிரதமர் மோடி தங்களை புறக்கணித்து விட்டனர் என தென்னிந்திய மக்கள் கருதுகின்றனர்.
தென் இந்தியா மக்களுடன் நாங்கள் உள்ளோம் என்பதை அவர்களுக்கு கூறிக் கொள்ளவே வயநாட்டில் போட்டியிடுகிறேன். எல்லாரும் இந்துக்கள்தான். ஆனால் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. எனவே மோடி இந்துத்துவா மட்டும் பேசாமல் தேசிய பாதுகாப்பு, விவசாயிகள், ஊழல், வேலைவாய்ப்புகள் குறித்து பேச வேண்டும் என்றார் ராகுல்காந்தி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications