இனி ராகுல் காந்தி எம்பி அல்ல.. மாஜி எம்பி! தகுதி நீக்க அறிவிப்பில் இருப்பது என்ன? பிறப்பித்தது யார்?
டெல்லி: மோடி பெயர் சர்ச்சை தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்க அறிவிப்பில் ராகுல் காந்தி எம்பி அல்ல அவர் எக்ஸ் எம்பி என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை பிறப்பித்தவர் யார்? என்ற விபரமும் வெளியாகி உள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பேசினார். அப்போது‛மோடி' என்ற பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டிய நிலையில் அவர் மீது நடவடிக்கை கோரினர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 ஆண்டு சிறை தண்டனை
இந்நிலையில் தான் குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி எனக்கூறிய நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

தகுதி நீக்கம்
மேலும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் 2 ஆண்டு சிறை தண்டனையின் அடிப்படையில் ராகுல் காந்தி இன்று எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அறிவிப்பு வெளியிட்டது யார்?
இந்த அறிவிப்பை நாடாளுமன்ற லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற லோக்சபா (செயலாளர்-பொது) உத்வால் குமார் சிங் மற்றும் இணை செயலாளர் திரிபாதி ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் திரிபாதியின் கையெழுத்து தான் தகுதி நீக்க உத்தரவில் இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி லோக்சபா உறுப்பினரான ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கி உள்ளது. இந்த தண்டனை அடிப்படையில் லோக்சபாவில் இருந்து 2023 மார்ச் 23ம் தேதி முதல் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த தகுதி நீக்க நடவடிக்கை என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 8ன் படி 102(1)(e) ஆர்ட்டிக்கிள் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் எம்பி என குறிப்பிட்டு..
மேலும் இந்த உத்தரவு நகல் ராகுல் காந்தி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் ராஜ்யசபா செயலாளர், இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்திக்கு அனுப்பிய விபரம் குறிப்பிடப்ப்டடுள்ளது. அதில் ராகுல் காந்தி எக்ஸ் எம்பி என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications