புலம் பெயர் தொழிலாளர்கள் மாண்டு போனதை உலகமே பார்த்துச்சே...மோடி அரசுக்கு தெரியாதா? ராகுல் சுளீர்
டெல்லி: புலம் பெயர் தொழிலாளர்கள் நடுவீதிகளில் மாண்டு போனதை இந்த ஒட்டுமொத்த உலகமே பார்த்த போது மோடி அரசுக்கு மட்டும் எதுவுமே தெரியாதா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அரசு, லாக்டவுன் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற தகவல்கள் இல்லை. அதனால் இறந்துபோனவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்ட விவரமும் அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த பதில் கடும் சர்ச்சையாகி உள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவு நடந்து போனது, ரயில்கள் மோதி இறந்து போனது என பல சம்பவங்கள் நிகழ்ந்தும் மத்திய அரசு கைவிரித்தது கடும் அதிருப்தியை உருவாக்கியது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மோடி அரசுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்ததும் தெரியாது? கொரோனா லாக்டவுனால் எத்தனை பேர் வேலையை பறிகொடுத்தனர் என்பதும் தெரியாது.
இறந்தது எத்தனை பேர் என நீங்கள் எண்ணாமல் விட்டுவிட்டால் யாருமே இறக்கவில்லை என அர்த்தமா? இத்தனை மரணங்களும் அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே.. ஒட்டுமொத்த உலகமே புலம்பெயர் தொழிலாளர்கள் மாண்டு போனதை பார்த்தது.. மோடி அரசுக்கு மட்டும் தெரியாதாம்.. இவ்வாறு ராகுல் காந்தி சாடியுள்ளார்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications