புலம் பெயர் தொழிலாளர்கள் மாண்டு போனதை உலகமே பார்த்துச்சே...மோடி அரசுக்கு தெரியாதா? ராகுல் சுளீர்
டெல்லி: புலம் பெயர் தொழிலாளர்கள் நடுவீதிகளில் மாண்டு போனதை இந்த ஒட்டுமொத்த உலகமே பார்த்த போது மோடி அரசுக்கு மட்டும் எதுவுமே தெரியாதா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அரசு, லாக்டவுன் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற தகவல்கள் இல்லை. அதனால் இறந்துபோனவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்ட விவரமும் அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த பதில் கடும் சர்ச்சையாகி உள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவு நடந்து போனது, ரயில்கள் மோதி இறந்து போனது என பல சம்பவங்கள் நிகழ்ந்தும் மத்திய அரசு கைவிரித்தது கடும் அதிருப்தியை உருவாக்கியது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மோடி அரசுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் இறந்ததும் தெரியாது? கொரோனா லாக்டவுனால் எத்தனை பேர் வேலையை பறிகொடுத்தனர் என்பதும் தெரியாது.
இறந்தது எத்தனை பேர் என நீங்கள் எண்ணாமல் விட்டுவிட்டால் யாருமே இறக்கவில்லை என அர்த்தமா? இத்தனை மரணங்களும் அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லையே.. ஒட்டுமொத்த உலகமே புலம்பெயர் தொழிலாளர்கள் மாண்டு போனதை பார்த்தது.. மோடி அரசுக்கு மட்டும் தெரியாதாம்.. இவ்வாறு ராகுல் காந்தி சாடியுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications