ஆட்சிகள் கவிழ்ப்பு...மெழுகுவர்த்தி ஏந்தியது...இவைதான் மோடி சாதனைகள்...ராகுல் காந்தி!!
டெல்லி: தொடர்ந்து மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும் விமர்சித்துள்ளார். மத்தியப்பிரதேச, ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சிகளை கவிழ்ப்பதைத்தான் மோடி அரசு சாதனையாக கொரோனா பொது முடக்கத்திலும் செய்து கொண்டிருந்தது என்று சாடியுள்ளார்.
இன்று தனது ட்விட்டர் பதிவில் பல்வேறு கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியுள்ளார். தனது பதிவில், ''கொரோனா பொது முடக்கத்தில் மோடி அரசின் சாதனைகள் இவைதான்: பிப்ரவரியில் ஹலோ ட்ரம்ப் நிகழ்ச்சி, மார்ச் - மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு, ஏப்ரல் மாதம் - மெழுகுவர்த்தி ஏற்றியது, மே - அரசின் ஆறாவது ஆண்டு விழா கொண்டாட்டம், ஜூன் - பீகாரில் காணொளி மூலம் பேரணி, ஜூலை - ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு.

தொடர்ந்து இதுபோன்ற சாதனைகளைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. இதனால்தான் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது'' என்று மோடி அரசை கிண்டல் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக மோடி அரசின் ஜிடிபி தோல்வி, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, எல்லையில் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்தது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

தனது இரண்டாவது வீடியோவில், ''சீனர்கள் நமது இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் ஒரு வரை படத்தை தங்களுக்குள் தீர்மானித்துக் கொள்கின்றனர். அதற்குத் தகுந்தவாறு உலக வரை படத்தை நிர்ணயிக்கின்றனர். எல்லை ராஜ தந்திரத்தில், கல்வான், டெம்சோக், பாங்காங் எதுவாக இருக்கட்டும், இந்த இடங்களில் தங்களது நிலைப்பாட்டை நிலை நிறுத்திக் கொள்ள திட்டமிடுகின்றனர். இதையே தான் பாகிஸ்தானுடன் இணைந்து செய்கின்றனர். இதை வெறும் எல்லை பிரச்சனையாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரதமரின் மீது அழுத்தம் கொடுக்கவே சீனா இதை செய்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications