இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் சிறப்பு.. கொரோனாவை திறமையாக கையாண்டதாக ராகுல் மத்திய அரசுக்கு குட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கூட கொரோனா வைரஸை இந்தியாவை விட திறமையாக சிறப்பாக கையாண்டுள்ளன என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் 73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1.12 லட்சம் பேர் பலியாகிவிட்டார்கள்.

தற்போது கொரோனா குறைந்தாலும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சாதனை

சாதனை

அவர் கூறுகையில் பாஜக அரசால் செய்யப்பட்ட மற்றொரு திடமான சாதனை இது என கூறி 2020-2021-க்கான ஜிடிபி வளர்ச்சி குறித்து அண்டைநாடுகளின் சதவீதத்தை ராகுல் குறிப்பிட்டுள்ளார். வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீனா, பூடான், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் ஜிடிபி குறிப்பிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இதில் இந்தியாவில் ஜிடிபி வளர்ச்சி -10.30 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதுபோல் ஆப்கானிஸ்தானில் -5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையில் -4.60 சதவீதமாகவும் பூடானில் 0.60 சதவீதமாகவும் பாகிஸ்தானில் -0.40 சதவீதமாகவும் உள்ளது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஜூன் மாதம் 4.5 சதவீதம் இருந்த ஜிடிபியை காட்டிலும் இது மோசமாக உள்ளதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. இவற்றை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி கோவிட்டை இந்தியாவை காட்டிலும் சிறப்பாக பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கையாண்டுள்ளன.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

கொரோனாவை 1.90 சதவீதமாகவும் வங்கதேசத்தில் 3.80 சதவீதமாகவும் ஜிடிபி வளர்ச்சி உள்ளது. காங்கிரஸை போன்று மற்ற எதிர்க்கட்சிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+