வெறுப்பு அரசியலை எதிர்த்து இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுங்கள்.. காங்கிரஸ் ஆவேச பேச்சு
டெல்லி: வெறுப்பு அரசியலை எதிர்த்து இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுங்கள் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் அதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். அப்போது ராகுல் காந்தி அந்த கூட்டத்தில் பேசினார்.

வலிமை வாய்ந்தவர்கள்
அவர் கூறுகையில் நாம் 52 எம்பிக்கள் இருக்கிறோம். பாஜகவுக்கு எதிராக 52 எம்பிக்களும் கடுமையாக போராட முடியும் என நான் உறுதி அளிக்கிறேன். நாம் 52 பேர்தான். ஆனால் அவர்கள் 303 பேர் என்றாலும் அவர்களை காட்டிலும் நாம் வலிமை வாய்ந்தவர்களாக உள்ளோம்.

போராட வேண்டும்
நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக போராடுகிறீர்கள் என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் எம்பியும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள மக்களின் ஜாதி, மதங்களை கடந்து அவர்களுக்காக போராட வேண்டும்.

ஆக்ரோஷம்
பாஜக எம்பிக்கள் வெறுப்பு மற்றும் கோபத்தால் நம்முடன் மோத நினைப்பர். நீங்கள் அதை ஜாலியாக வேடிக்கை பார்க்க போகிறீர்கள். ஆனால் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்.
|
ராகுல் வாழ்த்து
சுயபரிசோதனை செய்து கொள்வதற்காகவும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்காகவும் நேரம் வந்துவிட்டது என்றார் ராகுல்காந்தி. லோக்சபாவின் காங்கிரஸ் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சோனியா காந்திக்கு ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது தலைமையில் வலிமையான எதிர்க்கட்சி, இந்திய அரசியலமைப்பை காப்பாற்றும் கட்சி என்பதை காங்கிரஸ் நிரூபிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications