எஸ்ஐஆர் குறித்து லோக்சபாவில் விவாதம்.. ராகுல் சொன்ன வார்த்தையால் கொதித்த பாஜக எம்பிக்கள்! கடும் அமளி
டெல்லி: எஸ்.ஐ.ஆர் குறித்து லோக்சபாவில் விவாதம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், RSS அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டதாக சாடினார். ராகுல் காந்தி சொன்ன வார்த்தையால் பாஜக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று SIR எனப்படும் நாடாளுமன்ற சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தை தொடங்கி வைத்தார். லோக்சபாவில் 10 மணி நேரம் இந்த விவாதம் நடைபெறும் என்றும், இதற்கான பதிலை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் நாளை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIR குறித்த விவாதத்தை தொடங்கி வைத்த ராகுல் காந்தி, அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பேசினார். மேலும், RSS அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டதாக சாடினார்.
ராகுல் காந்தி கூறுகையில், "காந்தியை கொலை செய்த பிறகு RSS அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டது. பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் RSS கைப்பற்றிவிட்டது. CBI, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளையும் RSS கைப்பற்றிவிட்டது" என்றார்.
ராகுல் காந்தி இவ்வாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, "இவையெல்லாம் தர்மசங்கடமான உண்மைகள்" என்றார்.
ராகுல் காந்தி SIR குறித்த விவாதத்தை திசைத் திருப்புவதாக மத்திய அமைச்சர் கிரிரண் ரிஜிஜூ குற்றம் சாட்டினார். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசுமாறு ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். அதன்பிறகு பேசிய ராகுல் காந்தி, என்னை இந்த அவையில் பேசுவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications