அகமதாபாத் கோர்ட்டில்... ஜாமீன் வாங்கிய கையோடு பாஜகவுக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி!
டெல்லி: மக்களிடம் கொள்கை ரீதியிலான போரை எடுத்துச் செல்ல உதவிய பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கும் நன்றி என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல்காந்தி தினமும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, அதன் முதல் 5 நாளில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், செல்லாது என அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பு கொண்ட ரூ.750 கோடி மதிப்பிலான நோட்டுகளை மாற்றி, ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தவறாக கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து அகமதாபாத் பெருநகர குற்றவியல் கோர்ட்டில் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக அவர் நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்துக்கு ராகுல் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர் எஸ் எஸ், பாஜகவில் உள்ள எனது அரசியல் எதிரிகள் தொடர்ந்து உள்ள மற்றொரு வழக்கில் ஆஜர் ஆவதற்காக நான் அகமதாபாத்தில் இருக்கிறேன்.
பொதுமக்களிடம் அவர்களுக்கு எதிரான கொள்கை ரீதியிலான போரை எடுத்துச் செல்ல இந்த களங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளதாக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய ராகுல், வாய்மையே வெல்லும் என தெரிவித்தார்.
இந்த வழக்கில் ராகுலுக்கு அகமதாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications