உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு... அரசு உடனடியாக உதவ வேண்டும்... ராகுல் காந்தி ட்வீட்
டெல்லி: உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மாநில அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அம்மாநிலத் தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ரிஷி கங்கா நீர்மின் நிலையம் சேதமடைந்துள்ளது. மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தோ திபத் போலீஸ் படை ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "தவுளிகங்கா ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உடனடியாக உதவ வேண்டும். மீட்புப் பணிகளில் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் நிற்பார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications