ஒரு இஞ்ச் நிலம் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என மோடி பச்சை பொய் சொல்கிறார்.. ராகுல் சீற்றம்!
டெல்லி: நமது நாட்டின் ஒரு இஞ்ச் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவே இல்லை என பிரதமர் மோடி தொடர்ந்து பொய் கூறி வருகிறார் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவின் லடாக், பூட்டானின் டோக்லா, வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம் பகுதிகளில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை சீனா படுகொலை செய்ததால் இரு நாடுகளிடையே யுத்த சூழ்நிலையும் உருவானது. ஆனால் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை 3 ஆண்டுகளாக தொடர்ந்த் நடத்தி வருகிறது.

இப்பின்னணியில், சீனா அதிகாரப்பூர்வமான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 1962-ம் ஆண்டு இந்திய நிலத்தை ஆக்கிரமித்து அக்ஷாய் சின் என பெயரிட்ட பகுதி, வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் ஆகியவை தம்முடைய நிலம் என சீனா குறிப்பிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா, தெற்கு திபெத் என பெயரிட்டிருக்கிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால் பிரதமர் மோடியோ, ஒரு இஞ்ச் நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவே இல்லை என தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். அண்மையில் லடாக் நான் சென்றிருந்தேன். அப்பகுதி மக்களும் கூட சீனா ஊடுருவியிருப்பதை சுட்டிக்காட்டினர். தற்போது சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் அருணாசலப் பிரதேசத்தை தம்முடையதாக சுட்டிக்காட்டி இருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி பகிரங்கமாக பேச வேண்டும் என்றார்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications