நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து லோக்சபாவில் விவாதிக்கனும்.. மோடிக்கு கடிதம் அனுப்பிய ராகுல் காந்தி!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக லோக்சபாவில் நாளை விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஒருநாள் விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் ராகுல் காந்தி.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி பதிலுரையாற்றினார்.

முன்னதாக லோக்சபா, ராஜ்யசபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிவடைந்த பின்னரே எந்த ஒரு விவாதமும் நடத்த முடியும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமும் பிரதமர் மோடியின் பதிலுரையும் முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நீட் தேர்வு முற்ரைகேடுகள் தொடர்பாக நாளை லோக்சபாவில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக புதிய எம்பிக்கள் பதவியேற்றது முதலே லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது; நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என திமுக எம்பிக்களும் முழக்கம் எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து இந்தியா கூட்டணி எம்பிக்களும் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் நீட் தேர்வை கைவிட வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி இருந்தனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications