மத்திய கிழக்கு நாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை அனுப்புக: ராகுல்
டெல்லி: கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தி இருக்கும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
மத்திய கிழக்கு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது, இதனால் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நாடுகளில் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிநிமித்தமாக தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதனையடுத்து இவர்களை மீட்டு வர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
The #Covid19 crisis & shutting of businesses in the Middle East have left thousands of Indian workers in deep distress & desperate to return home. The Govt must organise flights to bring home our brothers & sisters most in need of assistance, with quarantine plans in place.
— Rahul Gandhi (@RahulGandhi) April 15, 2020
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆழ்ந்த கவலையுடன் நம்பிக்கை இழந்து போய் உள்ளனர். இவர்களை அழைத்துவர மத்திய அரசு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கு நமது சகோதர சகோதரிகளை அழைத்து வருவதுடன் அவர்களை தனிமைப்படுத்தும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications