மத்திய கிழக்கு நாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை அனுப்புக: ராகுல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தி இருக்கும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தத்தளிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    ஆசியாவிலேயே இந்தியா தான் மோசம்... அதிர வைக்கும் புள்ளி விவரங்கள்

    மத்திய கிழக்கு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது, இதனால் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

    Rahul urges Centre to organise flights to bring back stranded workers in Middle East

    இந்த நாடுகளில் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிநிமித்தமாக தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதனையடுத்து இவர்களை மீட்டு வர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆழ்ந்த கவலையுடன் நம்பிக்கை இழந்து போய் உள்ளனர். இவர்களை அழைத்துவர மத்திய அரசு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இந்தியாவுக்கு நமது சகோதர சகோதரிகளை அழைத்து வருவதுடன் அவர்களை தனிமைப்படுத்தும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+