ராஜஸ்தானில் பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி.. காங்கிரஸ்க்கு இவ்வளவு தானா.. டைம்ஸ் நவ் இடிஜி கணிப்பு
டெல்லி : ராஜஸ்தான் மாநிலத்தில் டைம்ஸ் நவ் இடிஜி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 108 முதல் 128 இடங்களையும் காங்கிரஸ் 69 முதல் 86 இடங்களையும் , மற்ற கட்சிகள் 13 முதல் 21 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தை பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் எப்போதுமே நேரடி போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் இரு மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. நம்மூரில் உள்ள அதிமுக திமுக போல், அங்கு பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன.

இந்தி பேசும் மக்கள் கொண்ட மாநிலங்களில் முக்கியமான மாநிலமான ராஜஸ்தான், தலைநகர் டெல்லியை ஒட்டி இருந்தாலும் பெரிய அளவில் தொழில் வளர்ச்சிகள் இல்லை. வேலைவாய்ப்புகளும் பெரிதாக இல்லை. மக்கள் பலர் இன்றுவரை கடினமான தொழில்களை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இங்கு நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் வாழ்வில் வெளிச்சத்தை தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களிக்கிறார்கள்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவம்வர் 25ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக 199 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்தததால் ஒத்திவைக்கப்பட்டது. 199 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 75% வாக்குகள் பதிவானது. ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பதிவானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து வருடங்கள் ஆண்ட கட்சி அடுத்த முறை ராஜஸ்தானில் மாறிவிடும். இதுதான் எதார்த்தமான ஒன்றாக ராஜஸ்தானில் காலம் காலமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகப்படியான வாக்கு சதவீதம் பதிவானதால் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்றே கூறப்பட்டது
ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரைக் கடந்த காலங்களில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் குறைந்த வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஆளும் தரப்பு மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதேநேரம் முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக வாக்குகள் பதிவான 7 தேர்தல்களில் ஒரே ஒரு முறை மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டன. ஆனால், இவை அனைத்தும் 1990களில் நடந்தவை. அதன் பிறகு எந்தவொரு கட்சியாலும் அங்கே ஆட்சியைத் தக்க வைக்க முடியவில்லை. மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்புகளை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்திய டைம் நவ் இடிஜி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 108 முதல் 128 இடங்களையும் காங்கிரஸ் 69 முதல் 86 இடங்களையும் , மற்ற கட்சிகள் 13 முதல் 21 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications