போர்க் கப்பலை ராஜீவ் குடும்பம் விடுமுறை உல்லாசத்துக்குதான் பயன்படுத்தியது: மாஜி கடற்படை அதிகாரிகள்
டெல்லி: ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை ராஜீவ் குடும்பம் விடுமுறை உல்லாசத்துக்கு பயன்படுத்தியது உண்மைதான் என முன்னாள் கடற்படை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
1987-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் லட்சத்தீவுகளில் ராஜீவ் காந்தி குடும்பம், அமிதாப்பச்சன் குடும்பம் விடுமுறையை கொண்டாடியது. அப்போது நாட்டின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விராத்தை ராஜீவ் குடும்பம் சொந்த பயன்பாட்டுக்கு உபயோகித்தது என்பது அப்போதே எழுந்த சர்ச்சை.
தற்போது லோக்சபா தேர்தலின் போது இவ்விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பினார். இந்த பஞ்சாயத்து இன்னமும் ஓய்ந்தபாடில்லை. பிரதமர் மோடியின் கருத்தை மறுத்து முன்னாள் கடற்படை தளபதி எல். ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மோடிக்கு ஆதரவு
இதற்கு பதிலாக மற்றொரு முன்னாள் கடற்படை தளபதி வி.கே. ஜேட்லி, முன்னாள் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் ஹரீந்தர் சிக்கா ஆகியோர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக வி.கே. ஜேட்லி கூறியதாவது:

அட்மிரல் கேபினில் ராஜீவ் குடும்பம்
ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை ராஜீவ் குடும்பம் பயன்படுத்தியதற்கு நான் நேரடி சாட்சி. அட்மிரலின் கேபினைத்தான் ராஜீவ் குடும்பம் பயன்படுத்தியது. லட்சத்தீவு செல்ல ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை ராஜீவ் குடும்பம் உபயோகித்தது. இத்தனையும் சோனியாவுடன் வெளிநாட்டினரும் வந்தனர்.

போர்க்கப்பலில் ஓய்வு
அது ஒன்றும் மிகச் சிறிய கப்பல் அல்ல. லட்சத்தீவுக்கு ராஜீவ் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தனர். அவர்கள் போர்க்கப்பலில்தான் தங்கினர். இவ்வாறு வி.கே. ஜேட்லி கூறினார்.

மவுனிகளாக அதிகாரிகள்
மற்றொரு கடர்படை அதிகாரியான ஹரீந்தர் சிக்கா கூறுகையில், போர்க்கப்பலை முறைகேடாக பயன்படுத்திய போது அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாதவர்களாக மவுனியாக இருந்தோம். வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சோனியாவும் வெளிநாட்டவரும் போர்க்கப்பலின் பல பகுதிகளுக்கு அதுவும் அதிகாரிகள் கூட அனுமதிக்கப்படாத பகுதிகளுக்கு சென்றனர். இதை அனுமதிக்கக் கூடாது என சுட்டிக் காட்டிய போது வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு ஹரீந்தர் சிக்கா தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications