Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? எதிர்க்கட்சிகளை சாடிய ராஜ்நாத் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எத்தனை இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? என்று மட்டுமே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்ற எனவும், எதிரிகளின் எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஒருபோதும் கேட்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் இன்று காட்டமாக பேசினார்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசினார். அப்போது இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

rajnath-singh-slams-opposition-s-questions-on-operation-sindoors-success

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை

இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக்கோரி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு லோக்சபாவில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மதியம் 12 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்பிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் மதியம் 2 மணிக்கு கூடிய போது மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு விளக்கம் அளித்து விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "பாகிஸ்தான் தவறான நடவடிக்கையை எடுத்தால் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடரும்.. அணு ஆயுத தாக்குதல் மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா பயப்படாது. பாகிஸ்தானுக்கு இருந்த சந்தேகங்கள் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக தீர்க்கப்பட்டன..

இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

இந்தியாவின் நவீன ஏவுகணைகள் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம்.. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்நாட்டின் ராணுவ உயர் ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்தோம். பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்திய ராணுவம் முறியடித்தது. போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் அதிகாரிகள் தான் நம்மை தொடர்பு கொண்டனர். இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையினை துளி அளவும் சந்தேகப்பட வேண்டாம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் தான் நாம் எதிர்க்கிறோம் என்று விளக்கம் அளித்தார்.

அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்று அடிக்கடி கேட்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதில் அளித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

சிறு சிறு விஷங்களை பெரிதுப்படுத்த கூடாது

எதிர்க்கட்சியினர் இந்திய விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டனவா என்று கேள்வி கேட்கிறார்கள். இந்த கேள்வி ஆரோக்கியமானது கிடையாது. ஆனால் எதிரிகள் விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஒரு முறை கூட அவர்கள் கேள்வி கேட்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டதா என்று தான் அவர்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது சிறு சிறு விஷங்களை பெரிதுப்படுத்த கூடாது.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது

இதுபோன்ற சிறு சிறு விஷங்கள் எல்லாம் முக்கியமானது கிடையாது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை. இந்தியா தனது இலக்கினை 100 சதவீதம் அடைந்தது. இதனால் தான் தாக்குதலை நிறுத்தியது. எந்த அழுத்தத்தினாலும் மோதலை நிறுத்தவில்லை. 1962 ஆம் ஆண்டு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட, நம் நாட்டின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரா?, இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனரா? என்று தான் கேட்டோம்.. எத்தனை இயந்திரங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+